முகப்பு
தற்போதைய செய்திகள்

4 நாள்களுக்குப் பிறகு உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 4 நாள்களுக்குப் பிறகு இன்று(வெள்ளிக்கிழமை) சற்றே உயர்ந்துள்ளது.

Updated On : 15 நவம்பர் 2024, 10:19 am IST
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 4 நாள்களுக்குப் பிறகு இன்று(வெள்ளிக்கிழமை) சற்றே உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தில் அதிரடியாகக் குறைந்தது. கடந்த 4 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 2,720 குறைந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து 4 நாள்களுக்குப் பிறகு இன்று தங்கத்தின் விலை சற்றே உயர்ந்துள்ளது.

இன்று(வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி, ஒரு சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 55,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 10 உயர்ந்து ரூ. 6,945-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கடந்த சில நாள்கள் குறைந்த நிலையில், இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை.

ஒரு கிராம் ரூ. 99-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments