FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

சைபர் மோசடியில் ரூ. 10 கோடியை இழந்த முதியவர்!

தில்லி சைபர் மோசடி தொடர்பாக...

Updated On : 15 நவம்பர் 2024, 3:32 pm IST
சைபர் மோசடி. (கோப்புப்படம்)
பகிர்:

தில்லி ரோஹினி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற 70 வயது பொறியாளர் சைபர் கிரைம் மோசடி மூலம் ரூ. 10 கோடியே 30 லட்சம் ஏமாற்றப்பட்டுள்ளார்.

காவல் துறை அதிகாரிகளின் தகவலின்படி, பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பொறியாளர் பல முன்னணி நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபருக்கு அவரது பெயரில் ஒரு கூரியர் வந்ததாக மோசடியாளர்களிடம் அழைப்பு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்நபர் மோசடியாளர்களின் அழைப்பை ஏற்று அவர்கள் கூறிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றியுள்ளார்.

Advertisement

Advertisement

மோசடியாளர்கள் அவரிடம், தைவானில் இருந்து தடைசெய்யப்பட்ட மருந்துகள் முதியவரின் பெயருக்கு வந்துள்ளதாகவும், இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, பாதிக்கப்பட்ட நபரிடம் தனிப்பட்ட தகவல்களைக் கேட்டு அச்சுறுத்தியுள்ளனர்.

இதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், நீங்கள் ஒரு தனி அறையில் பூட்டிக்கொண்டு செல்ஃபோன் அல்லது மடிக்கணினியில் உள்ள காமிரா முன் அமர வேண்டும் என்று மோசடி நபர்கள், பாதிக்கப்பட்டவரை மிரட்டியுள்ளனர்.

அவருக்கு உதவி செய்வதுபோன்று நடித்த மோசடியாளர்கள் மும்பை காவல் துறை அதிகாரிபோல பேசி, ரூ. 1 கோடியே 30 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். மோசடியாளர்கள், மிரட்டி பெற்ற தொகையை வெவ்வேறு கணக்குகளுக்கு அனுப்பியுள்ளனர்.

மிகப்பெரிய மோசடியை அறிந்த அவர், காவல் துறை உதவியை நாடியுள்ளார். தொடர்ந்து, இவ்வழக்கு சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மாற்றப்பட்டுள்ளது.

சைபர் காவல் துறையினர் ரூ. 60 லட்சத்தை முடக்கியுள்ள நிலையில், மீதமுள்ள பணத்தை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments