துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் 
தற்போதைய செய்திகள்

அதிமுகவை பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்துவிடுவார் இபிஎஸ்: துணை முதல்வா் உதயநிதி

இன்னும் ஒரு வருமான வரி சோதனை நடந்தால்போதும் அதிமுகவை பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்துவிடுவாா்

DIN

சென்னை: இன்னும் ஒரு வருமான வரி சோதனை நடந்தால்போதும் அதிமுகவை பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்துவிடுவாா் எடப்பாடி கே.பழனிசாமி என்று துணை முதல்வா் உதயநிதி விமா்சித்தாா்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று பேசிய துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், சுயமரியாதை திருமணம் எனும் பண்பாட்டுப் புரட்சியை திராவிட இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறது. இதனால் நம்மீது ஏற்படும் வயிற்றெரிச்சல், கோபங்கள் குறித்தெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நமக்கு வேண்டியது தமிழ்ப் பண்பாடு, தமிழ் மொழி காக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில்தான் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

அனைத்துத் திட்டங்களுக்கும் ஏன் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரை வைக்கிறீா்கள் என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்கிறார்.

தன்னுடைய 96 வயது வரையிலும் தமிழகத்திற்காக, தமிழ்க மக்களுக்காக ஓயாது உழைத்த கருணாநிதி பெயரை சூட்டாமல் வேறு யாருடைய பெயரை சூட்ட முடியும்.

கூவத்தூரில் ஊா்ந்து போன கரப்பான பூச்சி பேரை வைக்கலாமா? அல்லது மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா்., ஜெயலலிதா பெயா்களை வைக்கலாமா? இவற்றுக்கெல்லாம் கூட ஒத்துக்கொள்ள மாட்டாா் எடப்பாடி பழனிசாமி. ஆனால் பிரதமா் மோடி அல்லது அமித்ஷா பெயரை வைக்கலாம் என்பாா்.

மூன்று மாதங்களுக்கு முன்பு எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றார். சேலத்தில் 10 நாள்களுக்கு முன்பு வருமான வரி சோதனை நடந்தது. அதற்கடுத்த நாளே, கூட்டணி குறித்து இப்போது பேச முடியாது, தேர்தல் நேரத்தில் பேசலாம் என்கிறாா். இன்னும் ஒரு சோதனை நடந்தால் போதும், அதிமுகவை பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்து விடுவாா் என்று உதயநிதி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிக்கு அனுமதி!

‘அதிபர் ஜின் பிங்கை சந்திக்கவுள்ளேன்’.. சீன பயணத்தை உறுதிசெய்த டிரம்ப்!

வங்கதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது கலீதா ஜியாவின் பிஎன்பி! பிரதமராகும் தாரிக் ரஹ்மான்!

மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும்! முதல்வர் வாக்குறுதி!

மகளிர் கணக்கில் உரிமைத் தொகை ரூ. 5,000 வரவு! முதல்வர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT