பலியான சிவஸ்ரீ. Din
தற்போதைய செய்திகள்

துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலி!

துணி துவைக்க சென்றபோது நடந்த சோகம்.

DIN

மேட்டூர் அருகே ஏரியில் துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வீரக்கல் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவலிங்கம், இவருடைய மகள் சிவருந்தினி (ரேவதி) (20), மகன் சிவஸ்ரீ (10). அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் முனுசாமி மகள் ஜீவதர்ஷினி (எ) திவ்யதர்ஷினி(14). இவர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள கொத்தி குட்டை ஏரியில் இன்று(அக். 20) காலை துணி துவைக்க சென்றனர்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற மூன்று பேரும் நீச்சல் தெரியாததால் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர். 3 பேரும் நீரில் மூழ்கியதை கண்ட அக்கம் பக்கத்தினர் பல மணி நேரம் தேடி 3 பேரின் சடலத்தை ஏரியில் இருந்து மீட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நங்கவள்ளி போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேதே பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரியில் மூழ்கி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT