தற்போதைய செய்திகள்

தீபாவளி கொண்டாட்டம்: திரையரங்குகளில் குவிந்த மக்கள்

புதிய படங்களைக் காண ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்கள்.

DIN

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில், திரையரங்குகளில் மக்கள் ஆர்வத்துடன் குவிந்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர், கவினின் பிளெடி பெக்கர், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தீபாவளியொன்றால் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, இனிப்பு வகைகளை உண்டு, திரையரங்குகளுக்கு சென்று புதிய படங்களைப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில், இன்று(அக். 31) காலைமுதலே திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும், ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

மழை இல்லாத காரணத்தால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தீபாவளி களை கட்டி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

SCROLL FOR NEXT