தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து நாசமானது.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த அந்த பகுதியில் மக்களுக்கு குடிநீர் வழங்கும் லாரி தண்ணீரை கொண்டு தீயை அனைக்க போராடினர், ஆனால் தீ மளமளவென கடை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால் கடை முழுமையாக எரிந்து சேதமடைந்தது. கடையில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து நாசமானது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.