கோப்புப்படம் DIN
தற்போதைய செய்திகள்

வேலை தேடி வந்த கேரள காதல் ஜோடி ரயில் மோதி பலி!

காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னைக்கு வேலை தேடி வந்த கேரளவைச் சேர்ந்த காதல் ஜோடி ரயில் மோதி பலியாகினர்.

DIN

காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னைக்கு வேலை தேடி வந்த கேரளவைச் சேர்ந்த காதல் ஜோடி ரயில் மோதி பலியாகினர்.

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் முகமது ஷரீப் (35), கோழிக்கோடை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (28). இருவரும் நேற்று இரவு 8:30 மணிக்கு கூடுவாஞ்சேரி – பொத்தேரி இடையே, பேசியபடி தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர்.

அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது ஷரீப், சம்பவ இடத்திலேயே பலியானார். ஐஸ்வர்யா படுகாயமடைந்தார்.

இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐஸ்வர்யாவை அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

மேலும், இறந்த ஐஸ்வர்யா 4 மாதம் கருவுற்று இருந்ததாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எப்ஸ்டீனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை! டிரம்ப்

சிவராத்திரி: பொய் சொல்லா மெய் அய்யனாா் கோயிலில் தேரோட்டம்

கடன் வாங்கும் அரசுகள்!

‘தவளை விஷம்’ பயன்படுத்தி அலெக்ஸி நவால்னி கொலை? ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு; ரஷியா மறுப்பு

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: லாலு, ராப்ரிக்கு எதிராக குற்றச்சாட்டை பதிவு செய்த தில்லி நீதிமன்றம்

SCROLL FOR NEXT