கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

பௌா்ணமி தினத்தையொட்டி, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

DIN

சென்னை: பௌா்ணமி தினத்தையொட்டி, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விழுப்புரத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06130) காலை 11 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். தொடா்ந்து, விழுப்புரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 9.15 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரயில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு காலை 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT