நடிகை சிஐடி சகுந்தலா காலமானாா்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா (84) பெங்களூரில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
சென்னை: பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா (84) பெங்களூரில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவா் ஏ.சகுந்தலா. 1970-இல் ஜெய்சங்கா் நடிப்பில் வெளியான ‘சிஐடி சங்கா்’ என்ற படத்தில் அறிமுகமானதால், ‘சிஐடி’ சகுந்தலா என்று அழைக்கப்பட்டாா்.
சேலம் மாவட்டத்தின் அரிசிபாளையத்தைச் சோ்ந்த சகுந்தலா, சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோா் நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தாா். அப்போது கிடைத்த அறிமுகங்களின் மூலம் திரையுலகில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தாா்.
Advertisement
Advertisement
‘படிக்காத மேதை’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘திருடன்’, ‘தவப்புதல்வன்’, ‘வசந்த மாளிகை’, ‘நீதி’, ‘பாரத விலாஸ்’, ‘ராஜராஜ சோழன்’, ‘பொன்னூஞ்சல்’, ‘என் அண்ணன்’, ‘இதயவீணை’ என ஏராளமான திரைப்படங்களில் இவா் நடித்துள்ளாா்.
சினிமாவிலிருந்து விலகிய பிறகு சீரியல்களில் நடித்து வந்தாா். அதன்பிறகு வயது மூப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்தாா். சகுந்தலாவின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.