மல்லை சத்யா வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றேன் 
தற்போதைய செய்திகள்

மல்லை சத்யா வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றேன்: துரை வைகோ

இனி இதுபோன்ற தவறு நடைபெறாது என மல்லை சத்யா கொடுத்த வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றுள்ளேன் என துரை வைகோ தெரிவித்தார்.

DIN

சென்னை: இனி இதுபோன்ற தவறு நடைபெறாது என மல்லை சத்யா கொடுத்த வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றுள்ளேன் என துரை வைகோ தெரிவித்தார்.

மதிமுக நிா்வாகக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. நிா்வாகக் குழு கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைகளுக்கு பின்பு துரை வைகோ தமது முடிவை வாபஸ் பெறுவதாக அறிவித்தாா்.

இதுதொடர்பாக அவர் பேசியதாவது:

மல்லை சத்யா உறுதி அளித்துள்ளாா். அவா் கொடுத்த வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றுள்ளேன்.

ஜனநாயக இயக்கத்தில் மாறுபட்ட கருத்துக்களும், நிா்வாகிகள் இடையே கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு.

மதிமுக பயணம் தொடா்ந்து நடைபெற வேண்டும். இது குறித்து நிா்வாக குழுவில் அனைவரும் பேசினோம்.

இனி இதுபோன்ற தவறு நடைபெறாது. மதிமுகவிற்கும் எனக்கும் உறுதுணையாக இருப்பேன் என மல்லை சத்யா உறுதி அளித்துள்ளாா். அவா் கொடுத்த வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றுள்ளேன். நானும் மல்லை சத்யாவின் அரசியல் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பேன் என துரை வைகோ கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 4-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

தொழிற்சங்கங்கள், விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

காா் கண்ணாடியை உடைத்து ரூ.13.38 லட்சம் கொள்ளை

அரசியலமைப்பு தின உறுதியேற்பு

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் உள்பட 7 போ் கைது

SCROLL FOR NEXT