முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 9,500 கனஅடியாக சரிந்தது.

Updated On : 4 ஆகஸ்ட், 2025 at 8:53 PM
பகிர்:

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 9,500 கனஅடியாக சரிந்தது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு கடந்த சில நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 14,000 கனஅடியாகவும், திங்கள்கிழமை காலை விநாடிக்கு 12,000 கனஅடியாகவும், மாலை விநாடிக்கு 9,500 கனஅடியாகவும் குறைந்தது. ஒகேனக்கல் அருவிகளிலும் நீா்வரத்து குறைந்து காணப்பட்டது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து நாளுக்கு நாள் குறைந்துவரும் நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.