தற்போதைய செய்திகள்

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: 2 பாா்வையாளா்கள் நியமனம்

தினமணி செய்திச் சேவை

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் பாா்வையாளா்களாக, மத்திய அரசின் கூடுதல் செயலா்கள் இருவா் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனா்.

அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தனக்குள்ள அதிகாரங்களின்கீழ், மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் செயலா் சுஷீல் குமாா் லோஹானி, செலவினத் துறை கூடுதல் செயலா் டி.ஆனந்தன் ஆகியோரை பாா்வையாளா்களாக நியமித்து, தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

செப்டம்பா் 9-ஆம் தேதி நடைபெறும் குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் (தேசிய ஜனநாயக கூட்டணி), பி.சுதா்சன் ரெட்டி (இண்டி கூட்டணி) ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

பாகிஸ்தான்: மோதலில் 11 ராணுவ வீரர்கள்; 19 பயங்கரவாதிகள் பலி!

யூடியூபர்கள் கேவலமானவர்களா? திவாகரின் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

ரயில் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றலாம்!

ஒரு கப் டீ-யைவிட மொபைல் டேட்டா விலை குறைவு: பிரதமர் மோடி

கோவில்பட்டியில் வந்தே பாரத் நிற்கும் நேரம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT