இடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயம்; நடந்தது என்ன?
பந்தநல்லூர் அருகே இடுகாட்டில் புதைக்கப்பட்ட பள்ளி மாணவியின் உடல் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்துள்ள பந்தநல்லூர் அருகே இடுகாட்டில் புதைக்கப்பட்ட பள்ளி மாணவியின் உடல் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்துள்ள பந்தநல்லூர் அருகே அரசடி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி தர்ஷிகா (10) கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
அவரது உடல் புதன்கிழமை மாலை மண்ணியாற்று கரையில் உள்ள இடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை சடங்குகள் செய்வதற்காக சிறுமியின் குடும்பத்தினர் சுடுகாட்டிற்கு சென்றபோது, சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிச்சியடைந்தனர்.
Advertisement
Advertisement
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பந்தநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியின் உடல் இன்னும் ஆழத்தில் உள்ளதா?, நரபலி கொடுப்பதற்காக உடலை தோண்டி எடுத்துச் சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The body of a girl buried in a cemetery has disappeared; what happened?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.