மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  
தற்போதைய செய்திகள்

மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு அதிகரிப்பு!

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 9,500கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 9,500கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 2514கன அடியிலிருந்து வினாடிக்கு 2326 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீா் மின் நிலையங்கள் வழியாக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8000 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணை நீா்மட்டம் 115.44 அடியிலிருந்து 115.08 அடியாக சரிந்துள்ளது. நீா் இருப்பு 85.63 டி எம் சி யாக உள்ளது.

Water release from Mettur dam for Delta irrigation increased.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT