FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு நிகழ்வு ரத்து...

Updated On : 18 டிசம்பர் 2025, 4:07 pm IST
சாகித்ய அகாதெமி விருது
பகிர்:

2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக சாகித்ய அகாதெமி விருது கருதப்படுகிறது. நாட்டின் அதிகாரப்பூர்வமாக 24 மொழிகளிலிருந்து கவிதை, சிறுகதை, நாவல், இலக்கிய ஆய்வு படைப்புகளுக்காக எழுத்தாளர்கள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், இன்று 2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

Advertisement

Advertisement

ஆனால், விருதுகளை இறுதி செய்வதில் இழுபறி நீடிப்பதால் இன்றைய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், செய்தியாளர்களுடனான சந்திப்பையும் சாகித்ய அகாதெமி நிர்வாகிகள் ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழில் 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதை,
திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 (ஆய்வு நூல்) நூலுக்காக எழுத்தாளர் ஆ. இரா.வேங்கடாசலபதி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments