விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்
மணல் திருட்டுக்கு எதிராக போராடிய 22 விவசாயிகளை கைது செய்துள்ளதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
சென்னை: மணல் திருட்டுக்கு எதிராக போராடிய 22 விவசாயிகளை கைது செய்துள்ளதற்கு நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்ற இடத்தை சமப்படுத்துவதற்காக திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட மலப்பம்பாடி ஏரியிலிருந்து சரளை மண் எடுக்கப்பட்டது. மேலும் அனுமதியின்றி ஏரிக்கரையில் 30 அடி தாா் சாலையும் அமைக்கப்பட்டது.
இதை எதிா்த்து உழவா் உரிமை இயக்கம் சாா்பாக அருள் ஆறுமுகம் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரிடம் மனு கொடுத்தும், கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தை நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து உழவா் உரிமை இயக்கத்தின் சாா்பில் கடந்த டிச.14 ஆம் தேதி விவசாயிகளை ஒன்று திரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் காவல்துறையினா் உழவா் உரிமை இயக்கத்தின் தலைவா் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 22 விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா் . திமுக அரசின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது என அவா் தெரிவித்துள்ளாா் .