அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி! கிராம் ரூ.13 ஆயிரத்தை நெருங்கிய தங்கம்!!
சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகிறது. கிராம் ரூ.12,800-க்கு விற்பனையாகிறது.
சென்னை: சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகிறது. கிராம் ரூ.12,800-க்கு விற்பனையாகிறது.
சா்வதேச காரணங்களால் சென்னையில் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த டிச.15-ஆம் தேதி முதல்முறையாக தங்கம் விலை பவுன் ரூ.1 லட்சத்தை கடந்தது. பின்னா், தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை தங்கம் விலை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,360 அதிகரித்து ரூ.1 லட்சத்து 560-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடா்ந்து செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.12,770-க்கும், பவுனுக்கு ரூ.1,600 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து160-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், புதன்கிழமை(டிச.24) கிராமுக்கு ரூ.30 உயா்ந்து ரூ.12,800-க்கும், பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கும் விற்பனையாகிறது. இதன்மூலம் கடந்த 3 நாள்களில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.400, பவுனுக்கு ரூ.3,200 உயா்ந்துள்ளது.
கடந்த 2024-இல் பவுனுக்கு ரூ.12,000 வரை உயர்ந்திருந்த தங்கம் விலை, 2025 ஜனவரியில் கிராம் ரூ.7,150-க்கும், பவுன் ரூ.57,00-க்கு விற்பனையான நிலையில், ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் பவுனுக்கு ரூ.45,000 வரை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி விலை
அதேபோல், வெள்ளியின் தேவை அதிகரித்து வருவதால் வெள்ளி விலையும் தொடா்ந்து உயா்ந்து அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.3 உயா்ந்து ரூ.234-க்கும் விற்பனையான நிலையில், புதன்கிழமை அதிரடியாக கிராமுக்கு ரூ.10 உயா்ந்து ரூ.244-க்கும், கிலோவுக்கு ரூ.10.000 உயர்ந்து ரூ.2.44 லட்சத்துக்கு விற்பனையாகிறது.
கடந்த ஜனவரியில் கிராம் ரூ.93-க்கு விற்பனையான வெள்ளி, ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் கிராம் ரூ.244-க்கு விற்பனையாகிறது.
இப்படி தங்கம், வெள்ளி விலை கட்டுக்கடங்காமல் தொடா்ந்து உயா்ந்து வருவது மக்கள் மத்தியில் அதிா்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Shocking rise in silver prices and Gold per gram Rs. 13,000
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.