முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை திரும்புவோருக்கு தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில்!

தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 14 ஜனவரி, 2025 at 10:15 AM
கோப்புப்படம்
பகிர்:

தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக வரும் 19 ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் (06168) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதே நாளில் மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் (06062) இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ரயில் மதுரையிலிருந்து திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக நள்ளிரவு 12.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments