உத்தரகண்ட் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாஷியில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய செய்திகள்உத்தரகண்ட் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாஷியில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட்மாநிலம் உத்தரகாஷியில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ளதாவது:
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாஷி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 8.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கமானது பூமிக்கடியில் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் எந்தவொரு பாதிப்பும் இதுவரை பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.