கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

விசாரணைக் கைதியை தப்பிக்க வைக்க முயற்சி! நண்பர் மீது வழக்குப் பதிவு!

தாணேவில் விசாரணைக் கைதியை தப்பிக்க வைக்க முயன்ற நண்பர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

மகாராஷ்டிர மாநிலத்தின் தாணே மாவட்டத்தில் நீதிமன்ற அறையிலிருந்து விசாரணைக் கைதியை தப்பிக்க வைக்க முயன்ற 19 வயது நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாணேவின் கல்யான் நீதிமன்றத்தில் நேற்று (ஜன.28) மதியம் ஆஜர் படுத்தப்பட்ட விசாரணைக் கைதியான நாகேஷ் தண்டே என்பவரின் நண்பரான சுஜித் குப்தா என்பவர் நாகேஷை தப்பிக்க வைக்கும் முயற்சியில் நீதிமன்ற அறையினுள் செய்கையில் அவரிடம் பேச முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அவரை அங்கிருந்து வெளியேறக்கூறிய காவல் துறையினரை குப்தா தாக்கி கீழே தள்ளியுள்ளார். அப்போது, அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளைப் பயன்படுத்தி நாகேஷை காவலர்களிடம் இருந்து விடுவிக்க முயற்சி செய்துள்ளார்.

இதையும் படிக்க: மண்டை ஓடுகளைத் திருடிய 2 பேர் கைது!

இதனைத் தொடர்ந்து, அவரை சுற்றிவளைத்து பிடித்த காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும், அவர் மீது காவல் துறையினரை தாக்கி அவர்களது பணியை செய்யவிடாமல் தடுத்ததிற்காக சட்டப்பிரிவு 132 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர் சாட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருவதாகவும் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT