தில்லி-கோவா விமானத்தில் பீடி புகைத்த பயணி மீது வழக்குப் பதிவு
தில்லி-கோவா விமானத்தில் பீடி புகைத்ததாக பயணி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லி-கோவா விமானத்தில் பீடி புகைத்ததாக பயணி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லியைச் சேர்ந்த ஆஷிஷ் என்பவர் தலைநகர் தில்லியிலிருந்து கோவாவிற்கு ஆகாசா ஏர் விமானத்தில் சனிக்கிழமை பயணித்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிறுவனத்தின் புகாரின்படி, பயணி விமானக் கழிப்பறைக்குள் 'பீடி' புகைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அவர் ஒரு லைட்டரை வைத்திருந்ததாகவும், இது விமானம் மற்றும் விமானத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் போலீஸ் அதிகாரி கூறினார்.
கோவா வந்தவுடன் அந்த பயணி உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக விமான நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கோவாவில் உள்ள மோபா விமான நிலைய காவல் நிலையத்தில் பயணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.