பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட டிட்டோ-ஜாக் அமைப்பினர். 
தற்போதைய செய்திகள்

டிட்டோ-ஜாக் அமைப்பினர் சாலை மறியல்: 150 பேர் கைது

இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ-ஜாக் அமைப்பினர் சாலை மறியல்.

இணையதளச் செய்திப் பிரிவு

திருவள்ளூர்: இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக்) சாா்பில், வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவில் ஜூலை 16, 17, 18 ஆகிய தேதிகளில் ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என டிட்டோ-ஜாக் சாா்பில்அறிவிக்கப்பட்டது.

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட டிட்டோ-ஜாக் அமைப்பினர்.

இந்நிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி சாலை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பி.ராஜாஜி, எஸ். பாலசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் டி.முருகன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஜே.ஜான், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் போராட்டத்தை டிட்டோ-ஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் இரா.தாஸ் தொடங்கி வைத்தார்.

அப்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் டிட்டோ-ஜாக் குழுவைச் சேர்ந்த 150 பேரை கைது செய்து தனியார் அரங்கத்தில் சிறை வைத்தனர்.

Police arrested 150 people who were involved in a road blockade on Thursday on behalf of the Tamil Nadu Primary Education Teachers' Movements Joint Action Committee (Tito-Jac)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி - பாட்னா இடையே படுக்கை வசதிகொண்ட முதல் வந்தே பாரத்! முழு விவரம்

கருணாநிதியைவிட மோசமாக ஆட்சி நடத்தும் ஸ்டாலின்! அண்ணாமலை

பங்குச் சந்தை நிலவரம்: ஆட்டோமொபைல் பங்குகள் விலை உயர்வு!

தங்கம் விலை இன்று குறைந்தது!

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறைச்சாலை நூலகத்தில் பணி! நாளுக்கு ரூ. 525 ஊதியம்!

SCROLL FOR NEXT