காவிரி ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞா் ராஜேஷ். 
தற்போதைய செய்திகள்

காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயம்: தேடும் பணி தீவிரம்

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயமானதால் தீயணைப்புத் துறை வீரர்கள் தேடி வருகின்றனா்.

DIN

கும்பகோணம்: கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயமானதால் தீயணைப்புத் துறை வீரர்கள் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மூப்பக்கோயில் பகுதியை சோ்ந்த ராஜரத்தினம். இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவரது கடைசி மகன் ராஜேஷ் (25) பொறியியல் பட்டதாரியான இவர் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தார்.

இந்நிலையில், ராஜேஷ் தனது நண்பா்கள் 2 போ்களுடன் சோ்ந்து ஞாயிற்றுக்கிழமை ஏரகரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது தண்ணீரின் வேகம் காரணமாக ராஜேஷ் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது நண்பா்கள் ராஜேஷை காணவில்லை சத்தமிட்டுள்ளனர். தனை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்து விரைந்து வந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட ராஜேஷை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT