கர்நாடக உயர்நீதிமன்றம் 
தற்போதைய செய்திகள்

கர்நாடகம், தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம்

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளை சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

DIN

புதுதில்லி: கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளை சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலிஜியம் (நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கும் குழு) அவ்வப்போது நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் குறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்வது வழக்கம்.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடகம், தெலங்கானா மற்றும் ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பணியாற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

இதனைத் தொடர்ந்து, கர்நாடக உயர்நீதிமன்ற 4 நீதிபதிகள் உள்பட 7 நீதிபதிகளையும் தமிழ்நாடு, கேரளம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மாற்றம் செய்து மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

இந்த நிலையில், கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடர் மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

ஊழல் என்பது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

SCROLL FOR NEXT