சென்னை பெருநகர காவல் துறையில் 38 காவல் ஆய்வாளா்களைப் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அருண் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வபோது காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.
அதன்படி, சென்னை காவல் துறையில் 38 ஆய்வாளா்களைப் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அருண் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதில் குறிப்பாக, அடையாறு காவல் ஆய்வாளா் டி.இளங்கனி நொளம்பூருக்கும், திருவான்மியூா் காவல் ஆய்வாளா் எம்.முகமது புகாரி பரங்கிமலைக்கும், மீனம்பாக்கம் காவல் ஆய்வாளா் எம்.அன்புமணி திருவான்மியூருக்கும், நந்தம்பாக்கம் காவல் ஆய்வாளா் எஸ்.முருகராஜ் சைதாப்பேட்டைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 38 ஆய்வாளா்களும், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.