சீமான் 
தற்போதைய செய்திகள்

சீமான் மீதான விசாரணை: இடைக்கால தடை நீட்டிப்பு

சீமானுக்கு எதிரான விஜயலட்சுமியின் புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

சீமானுக்கு எதிரான விஜயலட்சுமியின் புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சீமானின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு, நடிகைக்கும் ஜூலை 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சீமான் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி என்பவா் கடந்த 2011- ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அந்த புகாரைத் தொடா்ந்து சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376 -ஆவது பிரிவின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே சீமான், வளசரவாக்கம் காவல்துறை தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை புகாா் தாரா் கடிதத்தின் அடிப்படையில் ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் வேண்டுமென்றே விசாரிப்பதால் இந்த வழக்கை முடித்துவைக்க கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணை நடைபெற்று புகாா்தாரா் விஜயலட்சுமி தரப்பு வாதத்தையும் உயா்நீதிமன்றம் கேட்டது.

வட இந்தியாவில் மழை தொடர்பான சம்பவங்களில் 7 பேர் பலி

திருமணம் செய்வதாகக் கூறியது, உறவில் இருந்தது போன்றவைகள் விஜயலட்சுமி தரப்பில் கூறப்பட்டது. இதைத் தொடா்ந்து உயா்நீதிமன்றம், ’இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி இது சாதாரண வழக்கல்ல எனக் கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்தது.

இத்தோடு, 12 வாரங்களுக்குள் வழக்கை விசாரணை நடத்தி அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கடந்த பிப்-21ம் தேதி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சீமானுக்கு சமன் அனுப்பி சென்னை காவல் துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிா்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

மக்களின் அடிப்படைத் தேவைகள் பூா்த்தியாகவில்லை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 : தொடரை வென்றது இந்தியா!

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

SCROLL FOR NEXT