ஜம்மு-காஷ்மீரின் சலால் அணையில் இருந்து திடீரென திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர். 
தற்போதைய செய்திகள்

சலால் அணை திடீர் திறப்பு: பாகிஸ்தானை நோக்கி பாயும் தண்ணீர்

ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சலால் அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

DIN

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல்கள் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சலால் அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவும் சூழலில் ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சலால் அணை மற்றும் ரம்பனியில் செனாப் ஆற்றின் குருக்கே கட்டப்பட்டுள்ள பக்லிஹார் நீர் மின் திட்ட அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

சலால் அணையின் 5 மதகுகள் வழியே அதிகயளவிலான தண்ணீரை இந்திய அதிகாரிகள் திறந்துவிட்டுள்ளனர்.

அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் பாகிஸ்தான் நோக்கி ஆர்ப்பரித்து பாய்ந்து செல்கிறது.

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவும் சூழலில் அணைகளில் இருந்து அதிகயளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதற்றமான சூழலில் இதுபோன்று வெள்ள நீரை திறந்துவிடுவதன் மூலமாக இது பாகிஸ்தான் மீதான மற்றொரு தாக்குதலாக கருதப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இதனிடையே, கனமழை காரணமாக அணைகள் நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT