FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காந்தி, காமராஜர் தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குவோம்: கே.அண்ணாமலை

காந்தி தியாகத்தையும், தேசபக்தியையும், காமராஜரின் தன்னலமற்ற மக்கள் சேவையை நன்றியுடன் நினைவு கூறுவோம்

2 அக்டோபர் 2025, 9:41 am IST
மறைந்த காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
பகிர்:

காந்தி தியாகத்தையும், தேசபக்தியையும், காமராஜரின் தன்னலமற்ற மக்கள் சேவையை நன்றியுடன் நினைவு கூறுவோம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு நாளையொட்டி, காந்தி தியாகத்தையும், தேசபக்தியையும், காமராஜரின் தன்னலமற்ற மக்கள் சேவையை நன்றியுடன் நினைவு கூறுவோம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

Advertisement

Advertisement

நமது நாட்டில் ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு அகிம்சையால் முடிவுகட்ட முடியும் என்பதைத் தனது செயலால் நிரூபித்த, தேசப்பிதாவாகப் போற்றப்படுகின்ற மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று.

தேசத்தின் விடுதலைக்காக சத்தியாகிரக போராட்டம், ஒத்துழையாமை இயக்கம் என பல்வேறு போராட்டங்களை அமைதி வழியில் முன்னெடுத்து, அதில் வென்று காட்டிய மகாத்மா காந்தி அவர்களின் தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குகிறோம்.

காமராஜர் நினைவு நாள்

தமிழகத்தில் ஏழைகளின் வளர்ச்சி, கல்வி முன்னேற்றம், நீர் மேலாண்மை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களின் முன்னோடியாக போற்றப்படும் கர்மவீரர் காமராஜரின் நினைவு நாள் இன்று.

எண்ணிலடங்கா அணைகள், மாணவர் பசி போக்க மதிய உணவு, தொழிற்புரட்சி என தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பணிகளை முன்னெடுத்த கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் தன்னலமற்ற மக்கள் சேவையை நன்றியுடன் நினைவு கூறுவோம் என கூறியுள்ளார்.

summary

Let us honor and worship Gandhi's sacrifice and patriotism says K. Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments