மறைந்த காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாள் இன்று கொண்டாடப்படுகிறது.  
தற்போதைய செய்திகள்

காந்தி, காமராஜர் தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குவோம்: கே.அண்ணாமலை

காந்தி தியாகத்தையும், தேசபக்தியையும், காமராஜரின் தன்னலமற்ற மக்கள் சேவையை நன்றியுடன் நினைவு கூறுவோம்

இணையதளச் செய்திப் பிரிவு

காந்தி தியாகத்தையும், தேசபக்தியையும், காமராஜரின் தன்னலமற்ற மக்கள் சேவையை நன்றியுடன் நினைவு கூறுவோம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு நாளையொட்டி, காந்தி தியாகத்தையும், தேசபக்தியையும், காமராஜரின் தன்னலமற்ற மக்கள் சேவையை நன்றியுடன் நினைவு கூறுவோம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

நமது நாட்டில் ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு அகிம்சையால் முடிவுகட்ட முடியும் என்பதைத் தனது செயலால் நிரூபித்த, தேசப்பிதாவாகப் போற்றப்படுகின்ற மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று.

தேசத்தின் விடுதலைக்காக சத்தியாகிரக போராட்டம், ஒத்துழையாமை இயக்கம் என பல்வேறு போராட்டங்களை அமைதி வழியில் முன்னெடுத்து, அதில் வென்று காட்டிய மகாத்மா காந்தி அவர்களின் தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குகிறோம்.

காமராஜர் நினைவு நாள்

தமிழகத்தில் ஏழைகளின் வளர்ச்சி, கல்வி முன்னேற்றம், நீர் மேலாண்மை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களின் முன்னோடியாக போற்றப்படும் கர்மவீரர் காமராஜரின் நினைவு நாள் இன்று.

எண்ணிலடங்கா அணைகள், மாணவர் பசி போக்க மதிய உணவு, தொழிற்புரட்சி என தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பணிகளை முன்னெடுத்த கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் தன்னலமற்ற மக்கள் சேவையை நன்றியுடன் நினைவு கூறுவோம் என கூறியுள்ளார்.

Let us honor and worship Gandhi's sacrifice and patriotism says K. Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாணே: நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மருத்துவர் ஓட்டிச்சென்ற கார் மோதல்; 6 பேர் காயம்

எஸ்.ஐ. தேர்வு: திமுக அரசின் 'எங்கும் தமிழ்' என்பது வாயளவுக் கொள்கைதானா? - இபிஎஸ் கேள்வி

கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ. 5,000 ஊதியம்! அமைச்சர் அறிவிப்பு!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு!

என்சிஇஆர்டி 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்துக்குத் தடை - உச்சநீதிமன்றம்!

SCROLL FOR NEXT