துப்பாக்கிகள் வைத்து ஆயுத, சரஸ்வதி பூஜை கொண்டாடிய புதுச்சேரி போலீசார் 
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிகள் வைத்து ஆயுத, சரஸ்வதி பூஜை கொண்டாடிய புதுச்சேரி போலீசார்

புதுச்சேரி காவல்துறை ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் காவலர்கள் சார்பில் துப்பாக்கிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு ஆயுத, சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுச்சேரி காவல்துறை ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் காவலர்கள் சார்பில் துப்பாக்கிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு ஆயுத, சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் ஆயுத பூஜை விழா பல்வேறு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், ஆட்டோ நிலையம், மின் லாரி நிறுத்தும் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயுத பூஜைகள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கோரிமேட்டில் அமைந்துள்ள ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் காவலர்கள் சார்பில் ஆயுத, சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி, ஆயுதப்படை தலைமை அலுவலகம் மாவிலை, வாழை உள்ளிட்ட தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூஜைகள் போடப்பட்டது.

ஆயுதப்படைப்பிரிவு கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில், பூ, பழம், அவல்பொரி கடலை, சுண்டல், இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகள் வைத்து ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆயுதப்படை வீரர்கள் மற்றும் தலைமை காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

Puducherry police celebrate Saraswati Pooja with guns

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகமாக 50 கோல்கள் அடித்த எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸி சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு!

மத்திய அரசு நிதி விடுவிப்பு! இலவச கட்டாயக் கல்வி சேர்க்கை தொடங்கப்படும்!

குளிர்காலம்: பத்ரிநாத் கோயில் நடை மூடப்படுவது எப்போது? அறிவிப்பு

தவெக விஜய்க்கும், திமுகவுக்கு ரகசிய தொடர்பு? திருமாவளவன்

ரகுராம் ராஜன் தந்தை காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT