பிகாரில் நக்சல் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!
பிகாரில் நக்சல் ஒருவர் கைது செய்யப்பட்டது குறித்து...
பிகாரின் நவாடா பகுதியில் நக்சல் ஒருவரைக் கைது செய்து அவரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பிகாரில், சிறப்பு அதிரடிப்படை (எஸ்.டி.எஃப்.) மற்றும் மாவட்ட காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ராஜௌலி பகுதியைச் சேர்ந்த அஜீத் குமார் யாதவ் என்பவரைக் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்தனர்.
இவர் ஜார்கண்ட் மாநிலத்தின் தடை செய்யப்பட்ட இந்திய மக்கள் விடுதலை முன்னணி (பி.எல்.எஃப்.ஐ.) எனும் அமைப்பைச் சார்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்து 21 பயன்படுத்தப்படாத தோட்டாக்களுடன் ஏகே 47 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அவரது மறைவிடத்திலிருந்து 315 போர் ரைஃபிள்கள், 10 பயன்படுத்தப்படாத தோட்டாக்கள், 2 தோட்டாப் பெட்டி மற்றும் மூன்று உருமறைப்பு சீருடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாட்டிலுள்ள நக்சல்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Police today arrested a Naxal in Bihar's Nawada area and seized weapons from him.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.