முகப்பு
தற்போதைய செய்திகள்

சிக்கன் பக்கோடா போட்டு வாக்கு சேகரித்த நாம் தமிழர் வேட்பாளர்!

சிக்கன் பக்கோடா போட்டும் துண்டுப் பிரசுரம் கொடுத்து நாம் தமிழர் வேட்பாளர் வாக்கு சேகரித்தது குறித்து...

Updated On : 30 மார்ச் 2026, 10:22 am IST
சிக்கன் பக்கோடா போட்டு வாக்கு சேகரித்த நாம் தமிழர் வேட்பாளர் திருகுமரன் - நாம் தமிழர் கட்சி
பகிர்:

சிக்கன் பக்கோடா போட்டும் துண்டுப் பிரசுரம் கொடுத்து நாம் தமிழர் வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இவர்களுடன் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகமும், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளர்களும் கூட்டணி அமைத்து களமிறங்கியுள்ளனர்.

அனைத்து கட்சியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், ஒவ்வொரு வேட்பாளரும் வித்தியாசமான முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருகுமரன் தனது கட்சி தொண்டர்களுடன் காட்பாடி ராஜிவ்காந்தி நகர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, காட்பாடி ராஜிவ்காந்தி நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருகுமரன், சாலையோரம் இருந்த சிக்கன் பக்கோடா கடைக்கு சென்று சிக்கன் பக்கோடா போட்டு வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வாக்கு சேகரித்தார்.

summary

Naam Tamilar Katchi Candidate Campaigns by Frying Chicken Pakodas...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.