பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: திருவள்ளூர் மாவட்டத்தில் 92.75% தேர்ச்சி
திருவள்ளூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 92.75 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளது குறித்து....
திருவள்ளூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் அனைத்து வகை பள்ளிகளில் 92.75 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாநில அளவில் 28 ஆவது இடம் பெற்றுள்ளது
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) காலை வெளியாகின. இந்தத் தேர்வில் 94.31 % மாணவ, மாணவிவகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் 31231 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் மாணவர்கள்-14047, மாணவிகள்-14920 என மொத்தம் 28967 பேர் தேர்ச்சி பெற்றனர்.
Advertisement
Advertisement
மாநில அளவிலான தேர்ச்சி தர வரிசைப் பட்டியலில் திருவள்ளூர் மாவட்டம் 92.75 சதவீதம் பெற்று 28 ஆவது இடம் பெற்றுள்ளது.
Regarding the 92.75% pass rate achieved by students in the 10th public examinations in the Thiruvallur district...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.