முகப்பு
ரசிக்க... ருசிக்க...

மிதமான சூட்டில் ஒரு மூலிகை டீ பருகலாமா?

காம்பு நீக்கிய ஆவாரம் பூ, செம்பருத்திப்பூ இதழ்கள்,

Updated On : 29 ஜூன் 2018, 1:18 pm IST
பகிர்:

தேவையான பொருள்கள்:

காம்பு நீக்கிய ஆவாரம் பூ, செம்பருத்திப்பூ இதழ்கள்,
துளசி இலை - தலா ஒரு தேக்கரண்டி
பொடித்தப் பனைவெல்லம் (அ) நாட்டுச் சர்க்கரை - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
ரோஜாப்பூ இதழ்கள் - 2 தேக்கரண்டி
சுக்குத்தூள் - அரை தேக்கரண்டி
வெற்றிலை - ஒன்று

செய்முறை: ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ, வெற்றிலை, துளசி, ரோஜாப்பூ இதழ்களை அலசி நான்கு நாள்கள் நிழலில் உலர்த்தவும். அதனுடன் ஏலக்காய், சுக்குத்தூள் சேர்த்து அரைத்தெடுக்கவும். இதுவே மூலிகைப்பொடி. ஒரு டம்ளர் தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி மூலிகைப் பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டவும். அதனுடன் பொடித்த பனை வெல்லம் (அ) நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து மிதமான சூட்டில் பருகவும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.