மிதமான சூட்டில் ஒரு மூலிகை டீ பருகலாமா?
காம்பு நீக்கிய ஆவாரம் பூ, செம்பருத்திப்பூ இதழ்கள்,
தேவையான பொருள்கள்:
காம்பு நீக்கிய ஆவாரம் பூ, செம்பருத்திப்பூ இதழ்கள்,
துளசி இலை - தலா ஒரு தேக்கரண்டி
பொடித்தப் பனைவெல்லம் (அ) நாட்டுச் சர்க்கரை - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
ரோஜாப்பூ இதழ்கள் - 2 தேக்கரண்டி
சுக்குத்தூள் - அரை தேக்கரண்டி
வெற்றிலை - ஒன்று
செய்முறை: ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ, வெற்றிலை, துளசி, ரோஜாப்பூ இதழ்களை அலசி நான்கு நாள்கள் நிழலில் உலர்த்தவும். அதனுடன் ஏலக்காய், சுக்குத்தூள் சேர்த்து அரைத்தெடுக்கவும். இதுவே மூலிகைப்பொடி. ஒரு டம்ளர் தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி மூலிகைப் பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டவும். அதனுடன் பொடித்த பனை வெல்லம் (அ) நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து மிதமான சூட்டில் பருகவும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.