செய்திகள்

ஒரு மைக்ரோ கதை படிங்க!

திடீரென விழிப்பு வந்ததும் அலறியடித்துக் கொண்டு எழுந்தான் குமார். 'அடடா... மணி எட்டாயிருச்சே

DIN

திடீரென விழிப்பு வந்ததும் அலறியடித்துக் கொண்டு எழுந்தான் குமார். 'அடடா... மணி எட்டாயிருச்சே... ஒன்பது மணிக்கு ஆபிஸ்ல இருக்கணும். நல்லா தூங்கிட்டேனே. வொய்ஃப் வீட்டில இருந்தா அவ எழுப்பிவிட்டுடுவா. அவதான் ஊருக்குப் போயி நாலு நாள் ஆச்சே' என சலிப்புடன் நினைத்தவன், அவசர அவசரமாகக் குளித்து, ஆடை அணிந்து கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குக் கிளம்பினான்.

எதிர்ப்பட்ட நண்பன் கிருஷ்ணன், 'என்ன குமாரு... காலையிலே இவ்வளவு அவசரமா கிளம்பிப் போற?' என்று கேட்டான்.

'உனக்குப் பதில் சொல்ல எனக்கு இப்ப டைம் இல்லை. அவசரமா ஆபிசுக்குப் போய்க்கிட்டிருக்கேன். அப்புறமா பேசிக்கலாம்' என்று வேகமாக நடந்தான்.

'இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. ஆபிசுக்குப் போறேங்கிற?' என்று கேட்டான் கிருஷ்ணன்.

மனைவியை உடனே வீட்டுக்கு வரச் சொல்ல வேண்டும் என்று நினைத்து போனை ஆன் பண்ணினான் குமார்.
இரா.சிவானந்தம், கோவில்பட்டி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT