செய்திகள்

நீங்கள் வெறுக்கும் நபரை ஒரு விழாவில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?

ANI

உங்களைப் பதற்றத்துக்குள்ளாக்கி மன அழுத்தம் ஏற்படக் காரணகர்த்தா ஒரு நபராக இருக்கலாம், குறிப்பாக நீங்கள் அவரை விரும்பவில்லை என்றால் நிச்சயம் அது உங்களுக்கு சில பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது

2,000 அமெரிக்கர்கள் வைத்து நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் ஒரு பார்ட்டியில் கலந்துகொண்ட பலர் எளிதில் குழப்பமடைவதாக தெரிய வந்தது. பார்டிக்குச் சென்ற முதல் பத்து நிமிடங்களில் அவர்கள் பதற்றம் அடைந்துவிடுகின்றனர். வீட்டுக்கே திரும்பிவிடலாமா அல்லது இன்னும் சிறிது நேரம் கொண்டாடிவிட்டுச் செல்லலாமா என்ற மன சஞ்சலத்துக்குள்ளாகின்றனர்.

இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. முதலாவது தாங்கள் விலக்கப்பட்டதாக, அல்லது தனித்துவிடப்பட்டதாக உணர்வது. இரண்டாவது அவர்கள் வெறுக்கக் கூடிய நபர்கள் அந்த பார்ட்டியில் பங்கேற்றிருப்பது.

பார்ட்டியில் நேரம் செலவழிப்பதால் தங்களுக்கு பயன் அளிக்குமா என்று உள்ளே நுழைந்தவுடன் உடனடியாக அறிந்ததாக பங்கேற்பாளர்களில் 78 சதவிகிதத்தினர் ஒப்புக் கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

எந்தவொரு பார்ட்டிக்குச் சென்றாலும் சகஜமாக அந்தச் சூழலுக்குப் பழக சுமார் 14 முதல் 15 நிமிடங்கள் தேவைப்படும் என்று பங்கேற்பாளர்கள்  கூறினர். ஒருவழியாக அதில் கலந்து கொண்டு சற்று நேரம் கடந்து கொண்டிருக்கையில், பாதிக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கூறியது ஆச்சரியப்படுத்தியது. தங்களுக்குப் பிடிக்காத நபரை அங்கு பார்த்துவிட்டால் அத்துடன் கொண்டாட்ட மனநிலை குறைந்துவிடுகிறது என்று கூறினார்கள்.

முன் எச்சரிக்கையாகப் பார்ட்டி தருபவரிடம் பார்ட்டிக்கு யார் யார் வருகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தாலும்,  பெரும்பாலும் அத்தகவலைப் பெற முடிவதில்லை. இருப்பினும், மூன்று நபர்களில் ஒருவராவது பார்ட்டியில் கலந்து கொள்ளும் மற்றவர்களைப் பற்றியத் தகவலை அறிந்து கொள்ளவே விரும்புகிறார்கள். 16 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் எப்போதும் தாங்கள் அப்படிக் கேட்டதை மறுக்கிறார்கள். 

மெக்ஸிகோவைச் சேர்ந்த அவகொடாஸ் சார்பாக இந்த ஆய்வினை நடத்தியதாக ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT