ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!
தனியார் துறை வங்கியான, ஆர்.பி.எல். வங்கியின் 2025-26 நிதியாண்டின் மார்ச் வரையான காலாண்டில், அதன் நிகர லாபம், மூன்று மடங்கு அதிகரித்து ரூ. 230 கோடியாக இருப்பதாக அறிவித்துள்ளது.
மும்பை: தனியார் துறை வங்கியான, ஆர்.பி.எல். வங்கியின் 2025-26 நிதியாண்டின் மார்ச் வரையான காலாண்டிற்கான நிகர லாபம், மூன்று மடங்கு அதிகரித்து ரூ. 230 கோடியாக இருப்பதாக வங்கி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இது ரூ. 69 கோடியாக இருந்தது. அதே வேளையில், முழு நிதியாண்டான 2025-26ல், வங்கியின் நிகர லாபம் 18 சதவீதம் உயர்ந்து ரூ. 822 கோடியாக இருந்தது.
2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், வங்கியின் முக்கிய நிகர வட்டி வருமானம், ஆண்டு அடிப்படையில் 7 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ. 1,671 கோடியை எட்டியது. இதுவே கடந்த ஆண்டு ரூ. 1,563 கோடியாக இருந்தது.
Advertisement
வங்கியின் நிகர வட்டி வரம்பு, கடந்த ஆண்டு இருந்த 4.89 சதவீதத்திலிருந்து 4.41 சதவீதமாகவும், டிசம்பர் காலாண்டில் இது 4.63 சதவீதமாக சுருங்கியுள்ளது.
மொத்த வாராக்கடன் விகிதம், கடந்த ஆண்டின் இறுதியில் இருந்த 2.60 சதவீதத்திலிருந்து மேம்பட்டு, மார்ச் 2026 இறுதியில் இது 1.18 சதவீதமாகச் சரிந்துள்ளது.