ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!
தனியார் துறை வங்கியான, ஆர்.பி.எல். வங்கியின் 2025-26 நிதியாண்டின் மார்ச் வரையான காலாண்டில், அதன் நிகர லாபம், மூன்று மடங்கு அதிகரித்து ரூ. 230 கோடியாக இருப்பதாக அறிவித்துள்ளது.
மும்பை: தனியார் துறை வங்கியான, ஆர்.பி.எல். வங்கியின் 2025-26 நிதியாண்டின் மார்ச் வரையான காலாண்டிற்கான நிகர லாபம், மூன்று மடங்கு அதிகரித்து ரூ. 230 கோடியாக இருப்பதாக வங்கி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இது ரூ. 69 கோடியாக இருந்தது. அதே வேளையில், முழு நிதியாண்டான 2025-26ல், வங்கியின் நிகர லாபம் 18 சதவீதம் உயர்ந்து ரூ. 822 கோடியாக இருந்தது.
2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், வங்கியின் முக்கிய நிகர வட்டி வருமானம், ஆண்டு அடிப்படையில் 7 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ. 1,671 கோடியை எட்டியது. இதுவே கடந்த ஆண்டு ரூ. 1,563 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
வங்கியின் நிகர வட்டி வரம்பு, கடந்த ஆண்டு இருந்த 4.89 சதவீதத்திலிருந்து 4.41 சதவீதமாகவும், டிசம்பர் காலாண்டில் இது 4.63 சதவீதமாக சுருங்கியுள்ளது.
மொத்த வாராக்கடன் விகிதம், கடந்த ஆண்டின் இறுதியில் இருந்த 2.60 சதவீதத்திலிருந்து மேம்பட்டு, மார்ச் 2026 இறுதியில் இது 1.18 சதவீதமாகச் சரிந்துள்ளது.
RBL Bank said its March quarter FY26 standalone net profit more than tripled to Rs 230 crore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.