யெஸ் வங்கியின் காலாண்டு லாபம் 32.5% உயர்வு!
யெஸ் வங்கி அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 32.54 சதவீதம் அதிகரித்து ரூ. 1,071.80 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்தது.
மும்பை: தனியார் வங்கியான யெஸ் வங்கி, ஜூன் வரை முடிய முதலாம் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 32.54 சதவீதம் அதிகரித்து ரூ. 1,071.80 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்தது. வங்கியின் முக்கிய நிகர வட்டி வருவாயில் ஏற்பட்ட வளர்ச்சியே இந்த உயர்வுக்குக் காரணமாக அமைந்ததாக வங்கி தெரிவித்தது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், வங்கியின் நிகர லாபம் ரூ. 808.65 கோடியாக இருந்தது. இருப்பினும், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், வங்கியின் நிகர லாபம் 0.96 சதவீதம் சரிந்துள்ளது.
வங்கியின் நிகர வட்டி வருவாய், கடந்த ஆண்டு ரூ. 2,371 கோடியிலிருந்து 17.5 சதவீதம் அதிகரித்து ரூ. 2,786 கோடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில், வங்கியின் நிகர வட்டி வரம்பு, கடந்த ஆண்டின் 2.5 சதவீதத்திலிருந்து ஜூன் காலாண்டில் இது 2.70 சதவீதமாக மேம்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மதிப்பீட்டுக் காலாண்டில், வங்கியின் மொத்த வைப்புத்தொகை கடந்த ஆண்டு ரூ. 2.76 லட்சம் கோடியிலிருந்து 14.3 சதவீதம் அதிகரித்து ரூ. 3.15 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
YES Bank reported a 32.54 per cent rise in consolidated net profit in June quarter.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.