FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ரூ.9 லட்சம் கோடி யாருடையது? அழிந்துபோன தரவுகள், மன்னிப்புக் கோரிய சிஇஓ!

யூனிசூப்பர் நிறுவனத்தின் கணக்குகள் முடக்கம்: கூகுள் மன்னிப்பு கோரல்

Updated On : 15 மே 2024, 3:45 pm IST
- Seth Wenig
பகிர்:

ஆஸ்திரேலியாவை சேர்ந்த யூனிசூப்பர் நிறுவனத்தின் 125 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 9 லட்சத்து 25 ஆயிரம் கோடி) இருப்பு கொண்ட கணக்குகள், கூகுள் கிளவுட்டில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்ட விவகாரத்தில் யூனிசூப்பர் மற்றும் கூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகள் மன்னிப்பு கோரியுள்ளனர்.

இதனால் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களின் வருடாந்திர ஓய்வூதிய சேமிப்பு கணக்கை அணுக முடியாத நிலை ஏற்படுட்டுள்ளது.

தரவுகளை, ஏற்கெனவே மற்றொரு இடத்தில் சேமித்து வைத்துள்ள யூனிசூப்பர்- விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இது தொடர்பாக யூனிசூப்பர் நிறுவனத்தின் சிஇஓ பீட்டர் சுன் மற்றும் கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு எனவும் இதனால் மோசமான சேவையை எதிர்கொண்ட உறுப்பினர்களிடம் மன்னிப்பைக் கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை தொடங்கி அழிக்கப்பட்ட தரவுகளை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments