பெங்களூரு: கர்நாடக பேரவையின் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதை அடுத்து, பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்தார் எடியூரப்பா.
இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மஜதவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 8 இடங்களை பாஜக கைப்பற்றினால் பாஜக ஆட்சியையும், முதல்வர் பதவியையும் எடியூரப்பா தக்கவைத்துக் கொள்ளலாம்.
5 தொகுதிகளில் பதிவான வாக்குகள் மாநிலத்தின் 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நண்பகல் 12 மணிக்குள் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகின்றன.