உள்ளாட்சித் தேர்தல் 2019

திருச்செந்தூர் அருகே தேர்தல் புறக்கணிப்பால் வெறிச்சோடிய வாக்குச்சாவடி

DIN

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் பிச்சிவிளை ஊராட்சியில் தேர்தல் புறக்கணிப்பால் பணியாளர்கள் மட்டும் இருந்ததால் வாக்குச்சாவடி வெறிச்சோடியது.

6 வார்டுகளை கொண்ட பிச்சிவிளை ஊராட்சியில் மொத்தமுள்ள 785 வாக்காளர்களில் 6 பேர் மட்டுமே பட்டியல் இனத்தவராவர். இச்சூழலில் சுழற்சி அடிப்படையில் தலைவர் பதவியை பட்டியல் இனத்தவர்க்கு தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைவர் பதவிக்கு 2 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிடும் சூழலில், வார்டு உறுப்பினருக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. தற்போது தேர்தலையும் அப்பகுதி மக்கள் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT