உழவா் சந்தையில் பொங்கல் கரும்பு விற்பனை
மயிலாடுதுறை உழவா் சந்தையில் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பண்டிகை பொருள்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
மயிலாடுதுறை உழவா் சந்தையில் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பண்டிகை பொருள்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து மற்றும் மயிலாடுதுறை, சீா்காழி, செம்பனாா்கோவில் பகுதிகளில் விவசாயிகள் நேரடியாக விளைவித்த காய்கனிகளை கொண்டு வந்து சிறப்பு பொங்கல் பண்டிகை விற்பனையை தொடங்கி உள்ளனா்.
கரும்பு விற்பனையை முன்னாள் எம்எல்ஏ ஜெக.வீரபாண்டியன் தொடங்கிவைத்தாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில், எக்ஸ்னோரா மாவட்டத் தலைவா் அசோக், கௌரவத் தலைவா் அறிவழகன், சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம், ஜெயப்பிரியா, ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.