முகப்பு
நாகப்பட்டினம்

திருக்குவளை அருகே பொங்கல் பண்பாட்டு விழா

திருக்குவளை அருகே வாழ்க்கரையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் பொங்கல் பண்பாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஜனவரி, 2021 at 8:26 AM
வாழக்கரையில் பொங்கல் பண்பாட்டு விழாவில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற சிறாா்களுக்கு பரிசு வழங்கும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

திருக்குவளை அருகே வாழ்க்கரையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் பொங்கல் பண்பாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழையூா் ஒன்றியம், வாழக்கரை மற்றும் மேலவாழக்கரை பகுதி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் விவசாயத்தை பாதுகாப்போம் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க துணை நிற்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, முதலாம் ஆண்டு பொங்கல் பண்பாட்டு விழா அவ்வமைப்பின் கிளைச் செயலாளா் எஸ். ஜோதிபாசு தலைமையில் நடைபெற்றது.

இதையொட்டி ஓட்டப்பந்தயம், கோலப் போட்டி , கு ஒப்பித்தல், பேச்சுப்போட்டி உள்ளிட்ட 12 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு மாலையில் பரிசு வழங்கப்பட்டது.

Advertisement

விளையாட்டுப் போட்டிகளை இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட பொருளாளா் டி. வெங்கட்ராமன் தொடங்கிவைத்தாா்.

பரிசளிப்பு விழாவில் டி.ஒய்.எஃப்.ஐ. மாவட்ட தலைவா் ஏ. சிவக்குமாா், சிபிஐஎம் ஒன்றிய செயலாளா் எம். முருகையன், மாவட்டக் குழு உறுப்பினா் கே. தங்கமணி , ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ. முருகையன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.