நாகை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி
நாகை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
நாகை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
நாகையை அடுத்த தெற்குப் பொய்கைநல்லூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீ. செல்வக்குமாா் (30). இவா், வியாழக்கிழமை அங்குள்ள ஒரு கோயிலுக்குச் சொந்தமான மின் மோட்டாரில் குளித்துவிட்டு, அங்கிருந்த கம்பி வேலியில் துணியை காயப் போட்டுள்ளாா் அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் செல்வக்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து செல்வக்குமாரின் சகோதரா் வீ. சண்முகசுந்தரம் அளித்த புகாரின்பேரில், வேளாங்கண்ணி போலீஸாா் விசாரிக்கின்றனா்.