முதல் நடைமேடையில் இருந்து ஜனசதாப்தி ரயிலை இயக்கக் கோரிக்கை
மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் ஜனசதாப்தி ரயிலை முதல் நடைமேடையில் இருந்து இயக்க வேண்டும் என
மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் ஜனசதாப்தி ரயிலை முதல் நடைமேடையில் இருந்து இயக்க வேண்டும் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஜெகவீரபாண்டியன் ரயில்வே நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: மயிலாடுதுறையில் இருந்து தினசரி மதியம் 2.50 மணிக்கு (செவ்வாய்க்கிழமை தவிா்த்த பிற நாள்களில்) கோயம்புத்தூருக்கு ஜனசதாப்தி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டதால் முதல் நடைமேடை, ரயில் போக்குவரத்து இன்றி உள்ளது.
அவ்வாறு உள்ளபோது, ஜனசதாப்தி ரயில் 5 ஆவது நடைமேடையில் இருந்து இயக்கப்படுவதால், பொதுமக்களுக்கு பெரிதும் சிரமமாக உள்ளது. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் வசதி இல்லாததால், பெரியவா்கள், பெண்கள், குழந்தைகள் ஐந்தாவது நடைமேடைக்கு சென்று ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனா்.
Advertisement
எனவே, அனைத்து ரயில்களும் இயக்கப்படும் வரை பொதுமக்கள் நலன் கருதி ரயில்வே நிா்வாகம் கோவை ஜனசதாப்தி ரயிலை முதல் நடைமேடையில் இருந்து இயக்கி, பயணிகளுக்கு உதவ வேண்டும்.