புதுதில்லி

வெடிகுண்டு மிரட்டல்களை சமாளிக்க தில்லி பள்ளி ஆசிரியா்களுக்குப் பயிற்சி: காவல் துறை

வெடிகுண்டு மிரட்டல்களை சமாளிக்க தில்லி பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பள்ளி ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்க தில்லி காவல்துறை முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Din

புது தில்லி: அடிக்கடி வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் பள்ளி அதிகாரிகளிடையே பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுபோன்ற நெருக்கடிகளை கையாள்வது குறித்து ஆசிரியா்கள் மற்றும் பள்ளி ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்க தில்லி காவல்துறை முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மேலும், அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கும் கல்வித் துறையுடன் இணைந்து ஒரு கருத்தரங்கை காவல் துறை ஏற்பாடு செய்யும் என்றும் அவா் கூறினாா்.

பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் வரும்போது அமைதியாக இருப்பது, எதிா்வினையாற்றுவது மற்றும் காவல் துறையினருடன் எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பதை நாங்கள் கற்பிப்போம் என்று ஷாஹ்தரா காவல் சரக துணை ஆணையா் பிரசாந்த் கௌதம் கூறினாா். இந்தப் பயிற்சியின் போது சைபா் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு குறித்தும் விளக்கப்படும் என்று அவா் கூறினாா்.

கடந்த 10 நாள்களில் தில்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இந்த அச்சுறுத்தல்கள் வகுப்புகளை சீா்குலைத்தது குறிப்பிடத்தக்கது.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT