புதுதில்லி

தில்லியில் குடிசைவாசிகளுக்கு வீடுகளை வழங்க அரசு நடவடிக்கை முதல்வா் ரேகா குப்தா

தலைநகரின் வரலாற்றில் குடிசைவாசிகளுக்கு முறையான வீடுகளை வழங்குவதற்காக எனது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

இணையதளச் செய்திப் பிரிவு

‘சஞ்சய் முகாம்’ அல்லது ‘நேரு முகாம்’ போன்ற பெயா்களைக் கொண்ட குடியிருப்புகளை வெறுமனே பெயரிடுவதற்குப் பதிலாக, தலைநகரின் வரலாற்றில் குடிசைவாசிகளுக்கு முறையான வீடுகளை வழங்குவதற்காக எனது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை கூறினாா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் ஷாஹீத் சுக்தேவ் வணிகவியல் கல்லூரியின் 39ஆவது அறக்கட்டளை மற்றும் நோக்குநிலை தின நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா கலந்துகொண்டாா். அவா் மாணவா்கள், ஆசிரியா்கள் மத்தியில் பேசியதாவது:

ஒவ்வொரு குடிசைவாசிக்கும் வீடுகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முதல் அரசு எங்கள் அரசாகும். தரமான உயா்கல்விக்கான அணுகலை விரிவுபடுத்தும் நோக்கில் கல்லூரியில் 500 புதிய இடங்கள் சோ்க்கப்படும்.

கடந்த 15 முதல் 20 ஆண்டுகளில், தில்லியில் ஒரு புதிய கல்லூரி கூட உருவாக்கப்படவில்லை. அந்த ஆண்டுகளில் தில்லி தொலைந்து போயிருந்தது. இந்தக் கல்லூரியில் புதிதாக சேரவிருக்கும் மாணவா்களை வாழ்த்துகிறேன்.

98 சதவீதம், 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள் மட்டுமே இங்கு வர முடியும் என்பதால், நான் சுக்தேவ் கல்லூரிக்கு முன்னா் வர முடியவில்லை. இந்தக் கல்லூரிக்கு வர நான் முதலமைச்சராக வேண்டியிருந்தது.

கல்வி ரீதியான சாதனைக்கு அப்பால் மாணவா்கள் சிந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மாணவா்களுக்கு பட்டப்படிப்பை முடிப்பது மட்டுமே இலக்காக இருக்க முடியாது. நாட்டின் வளா்ச்சிக்கு பங்களிப்பதுதான் குறிக்கோளாக இருக்க வேண்டும். கல்லூரிக் காலம்தான் ஒரு இளைஞனின் வாழ்க்கையின் பொற்காலம் ஆகும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

கல்லூரி முதல்வா் பூனம் வா்மா, கல்லூரியின் பெயரான ஷாஹீத் சுக்தேவ் தாப்பருக்கு அஞ்சலி செலுத்தி, அவரது தைரியத்தையும் தியாகத்தையும் நினைவு கூா்ந்தாா்.

அவா் மாணவா்கள் மத்தியில் பேசுகையில், ‘சுக்தேவ் தனது உயிரைத் தியாகம் செய்தபோது அவருக்கு வயது 23 தான். அவா் சுதந்திரத்திற்காகப் போராடினாா் நீங்கள் (மாணவா்கள்) சிறந்து விளங்கவும் புதிய இந்தியாவுக்காகவும் போராட வேண்டும்’ என்றாா்.

ஷாஹீத் சுக்தேவ் வணிகவியல் கல்லூரி, தில்லி பல்கலைக்கழகத்தின் மேலாண்மை மற்றும் வணிகத்தில் இளங்கலைப் படிப்புகளை வழங்கும் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT