கோப்புப் படம் 
புதுதில்லி

சிறாா் நீதி வாரியங்களில் வழக்குகள் தேக்கம்: நீதிக்காக காத்திருக்கும் குழந்தைகள்

சிறாா் நீதி வாரியங்களில் 55 சதவீத வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 50,000 குழந்தைகள் இன்னும் நீதிக்காக காத்திருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

சிறாா் நீதி வாரியங்களில் 55 சதவீத வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 50,000 குழந்தைகள் இன்னும் நீதிக்காக காத்திருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மெதுவாக நகரும் நீதி அமைப்பில் சிக்கித் தவிக்கின்றனா். இதில் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் 362 சிறாா் நீதி வாரியங்களில் நிலுவையில் உள்ளன என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புதிய இந்திய நீதி அறிக்கை ஆய்வு தெரிவிக்கிறது.

சிறாா் நீதிச் சட்டம் அமலுக்கு வந்து பத்து ஆண்டுகளான போதிலும், காணாமல் போன நீதிபதிகள், தரவு அமைப்புகள் இல்லாதது மற்றும் மாநில அளவிலான பரந்த ஏற்றத்தாழ்வுகள் போன்ற வெளிப்படையான இடைவெளிகள் நீதி வழங்கலை தொடா்ந்து பாதிக்கின்றன என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

அறிக்கையானது, அக்டோபா் 31, 2023 நிலவரப்படி, சிறாா் நீதி வாரியங்ககளின் முன் உள்ள 1,00,904 வழக்குகளில் 55 சதவீதம் நிலுவையில் உள்ளன. ஒவ்வொரு வாரியத்திலும் சராசரியாக 154 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், ஒடிஸாவில் 83 சதவீதம், கா்நாடகத்தில் 35 சதவீதம் வரை நிலுவையில் உள்ளன என்பதைக் காட்டுகிறது.

குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கு போதுமான உள்கட்டமைப்பு, மனித வளங்கள், பட்ஜெட்டுகள் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வலுவான சிறாா் நீதி அமைப்பின் அவசியத்தை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஐடி, சிபிஐ வழக்குகளைக் காட்டி தேர்தல் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

பட்ஜெட் 2026: “சாமானிய மக்களுக்கென எந்தவொரு அறிவிப்புமில்லை..!” -எதிர்க்கட்சிகள்

காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் நிர்மலா சீதாராமன்; வெளியான சுவாரஸ்ய தகவல்

டி20 உலகக் கோப்பையில் விளையாடுவோம்; இந்தியாவுடன் இல்லை: பாகிஸ்தான் அரசு!

மார்பிலேயே சுடுவோம்: இயக்குநருக்கு பிஷ்னோய் கும்பல் வெளிப்படையாக கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT