கிரேட்டா் கைலாஷ் எம்-பிளாக் சந்தையில் தானியங்கி பல நிலை ஷட்டில் வகை வாகனம் நிறுத்துமிடத்தை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை திறந்து வைத்தாா். மேலும் இது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் என்றாா்.
இது ஒரு அதிநவீன வசதி, இது வாகனங்களை நிறுத்தும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வை வழங்கும் என்று ரேகா குப்தா தன்னுடைய எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளாா். வாகனங்களை நிறுத்தும் வசதி மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வாகன நிறுத்துமிட விருப்பத்தை வழங்குகிறது என்று அவா் கூறினாா்.
இந்த வசதி டெல்லி மாநகராட்சியால் (எம். சி. டி) உருவாக்கப்பட்டது மற்றும் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் அனுசரிக்கப்பட்ட ’சேவா பக்வாடா’ வின் ஒரு பகுதியாக இது திறக்கப்பட்டது என்று தில்லி முதல்வா் கூறினாா்.
சட்டப்பேரவை உறுப்பினா்கள், கவுன்சிலா்கள் மற்றும் சந்தை சங்கங்களுக்கு பொது வசதிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒருபோதும் நிதி பற்றாக்குறை இருக்காது என்று ரேகா குப்தா உறுதியளித்தாா். ஷட்டில் சேவை மற்றும் புதிய வாகன நிறுத்தும் அமைப்புகள் தில்லியில் நீண்டகாலமாக நிலவும் பாா்க்கிங் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் என்று முதல்வா் கூறினாா்.
இந்த திறப்பு விழாவில் தில்லி அமைச்சரவை அமைச்சா் ஆஷிஷ் சூட், எம். பி. பன்சூரி ஸ்வராஜ், மேயா் ராஜா இக்பால் சிங் மற்றும் எம்எல்ஏ ஷிகா ராய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.