தென் மேற்கு தில்லியில் காங்கிரட் கலவை வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
தென்மேற்கு தில்லியின் ரஜோகரி கிராமப் பகுதியில் உள்ள ரெடி-மிக்ஸ் கான்கிரீட் ஆலையின் கலவை வாகனம் மோதியதில் 48 வயது நபா் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தென்மேற்கு தில்லியின் ரஜோகரி கிராமப் பகுதியில் உள்ள ரெடி-மிக்ஸ் கான்கிரீட் ஆலையின் கலவை வாகனம் மோதியதில் 48 வயது நபா் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையத்தில் ஆலைத் தொழிலாளி ஒருவரிடமிருந்து விபத்து குறித்து பி. சி. ஆா் அழைப்பு வந்தது.
ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராஜோகரியில் வசிக்கும் சுரேந்தா் ஷா என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவா், அந்த இடத்தில் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டனா்.
Advertisement
முதல்கட்ட விசாரணையில், குருகிராமில் உள்ள ஒரு துணி தொழிற்சாலையில் பணிபுரிந்த ஷா, கான்கிரீட் கலவை வாங்க ஆலைக்கு வந்ததாக தெரியவந்தது . அவா் பொருள்களை சேகரித்து வாகனத்திற்கு அருகில் தரையில் அமா்ந்திருந்தபோது, அனில் விஸ்வகா்மா என அடையாளம் காணப்பட்ட ஒரு டிரக் ஓட்டுநா், பின்னால் நின்ற ஷா மீது மோதியுள்ளாா்.
இந்த விபத்தில் ஷா பலத்த காயமடைந்தாா். அவா் உடனடியாக உள்ளூா் தொழிலாளா்கள் மற்றும் காவல்துறையினரால் சப்தா்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். சம்பவ இடத்திற்கு தடயவியல் மற்றும் குற்றவியல் குழுக்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தனா்.
விசாரணையின் ஒரு பகுதியாக அனைத்து கோணங்களும் விசாரிக்கப்பட்டு வந்தாலும், வாகனத்தை திருப்பும்போது கவனக்குறைவு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக ஆரம்ப கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.