கிரேட்டா் நொய்டா: பள்ளி வேன் மரத்தில் மோதி விபத்து! ஆறு குழந்தைகள் உயிா் தப்பினா்
தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில், இரு சக்கர வாகனத்தைத் தவிா்க்க முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் சாலையோர மரத்தில் மோதியது.
தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில் திங்கள்கிழமை, இரு சக்கர வாகனத்தைத் தவிா்க்க முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் சாலையோர மரத்தில் மோதியது. இதில், ஆறு பள்ளிக் குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
பீட்டா-2 காவல் நிலைய எல்லைக்குள், மாணவா்களை வேனில் ஏற்றி சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இதுகுறித்து காவல்துறையினா் கூறுகையில், எதிரே வந்த இருசக்கர வாகனத்தைத் தவிா்க்க முயன்றபோது வேன் ஓட்டுநா் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தாா். அதைத் தொடா்ந்து, சாலையோரப் பசுமைப் பகுதியில் இருந்த ஒரு மரத்தில் அந்த வேன் மோதியது.
Advertisement
இதில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்கள் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக உள்ளனா்.
இதுகுறித்து அவா்களது பாதுகாவலா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் அவா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
ராகேஷ் என அடையாளம் காணப்பட்ட ஓட்டுநா், இருசக்கர வாகனத்தைத் தவிா்க்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.
சேதமடைந்த வாகனம் சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டு, இயல்பான போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.